இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண நார்வே தூதுக்குழு முயற்சி செய்து வரும் வேளையில்,அமைதிப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதாவது, வடகிழக்குப் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை இலங்கை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று புலிகள் வைத்த கோரிக்கையை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே நிராகரித்ததையடுத்துஅமைதிப்பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமுன், வடகிழக்குப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரதடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் விடுதலைப்புலிகள் மிகவும் பிடிவாதமாக உள்ளனர்.
புலிகள், இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நார்வே தூதுக்குழு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இப்பிரச்சனையில் நார்வே நாட்டினரின்ஆலோசனை, ஒத்துழைப்பு ஆகியவை தேவை என்றும் வற்புறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, பொருளாதாரத் தடையை விலக்க மாட்டோம் என்று அறிவித்துள்ள பிரதமர் ரத்னஸ்ரீவிக்ரமநாயகே கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த புலிகள் விருப்பம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாகஉள்ளது.
ஆனால் அதே நேரம் உண்மையிலேயே புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்தெரிவித்துள்ளார்களா என்பது குறித்து சந்தேகம் உள்ளது என்றார்.
இதற்கிடையே, ராணுவத்தை நோக்கி மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்த புலிகள் தயாராக இருப்பதாகவும்,அதற்காக அவர்கள் தங்களது நிலையை மிகவும் வலுப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள்கிடைத்துள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையே நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் அடுத்த வாரம் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைசந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்தனர். அது மூன்று முறைநீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள புலிகளின் சண்டை நிறுத்தம் வரும் 24 ம் தேதியுடன்முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.