இந்திய வீரர்கள் படுகொலை: வாஜ்பாய் தலைமையில் ஆலோசனை
டெல்லி:
இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் வாஜ்பாய்தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த வாரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களை வங்கதேச ரைபிள் படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
பின்னர் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களதுஉடல்களை வங்கதேச அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
மிகக்கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அவர்களது உடல்களைப் பார்த்த பிரதமர்வாஜ்பாயும், உள்துறை அமைச்சர் அத்வானியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதற்கான காரணத்தைக்கூறுமாறு வங்க தேச அரசிடம் கேட்டுள்ளனர்.
உயர்மட்டக் குழுக்கூட்டம்:
இதற்கிடையே, இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கானகாரணம் குறித்து பிரதமர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படை தலைமை இயக்குனர் சூர்சாரன், உள்துறை அமைச்சக செயலர் கமல் பாண்டேஆகியோர் கலந்து கொள்வர்.
யு.என்.ஐ.