கையை காணிக்கை தந்த பக்தர்
விஜயவாடா:
துர்க்கை அம்மன் தனது பிரார்த்தனையை பூர்த்தி செய்து வைத்ததற்காக தனது இடது கையை பக்தர்ஒருவர் காணிக்கையாக அளித்திருக்கிறார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ஜனார்தன ராவ் (வயது 45) என்பவர் ராஜமுந்திரியில்வாழ்ந்து வருபவர். இவர் 45 நாள் பவானி தீக்ஷை என்ற விரதத்தில் ஈடுபட்டிருந்தாார்.
தனது பிராரத்தநை நிறைவேறினால் தனது இடது கையை துர்கா தேவிக்கு காணிக்கையாக தருவதாகவேண்டிக் கொண்டார்.
இவர் தனது பிரார்த்தனை நிறைவேறியதும் சனிக்கிழமை ஆந்திராவில் இருக்கும் இந்திரகீலாதரிமலையில் இருக்கும் தேவி கோவிலில் பூஜை செய்து விட்டு தான் வேண்டிக்கொண்டபடி தனது இடதுகையைஅரிவாள் மூலம் வெட்டி புனித நதியான கிருஷ்ணாவில் போட்டு தேவிக்கு தன் பிரார்த்தனையை நிறைவுசெய்தார்.
ஆனால் இவரது பிரார்த்தனை என்ன என்பது தெரியவில்லை.
ஜனார்தன ராவ் பல்கலைகழக பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உறவினர்கள்அவரை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர் என்றனர்.
யு.என்.ஐ.