ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் அறிவிப்பு
பரோடா:
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறும் இந்திய வீரர்களின்பட்டியல் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது இறுதி பட்டியல் அடுத்தமாதம் 18ம் தேதி அறிவிக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 24ம் தேதி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
இந்திய- ஜிம்பாப்வே அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடுகின்றன. பின் 3 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் போட்டியிலும்விளையாடுகின்றன.
இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் தேர்வு பரோடாவில்ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
தேர்வுக் குழு கூட்டத்தில் வீரர்கள் தேர்வு குறித்த விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள்பட்டியலை தேர்வு குழு தலைவர் சந்து போர்டே அறிவித்தார்.
அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), ஆஜய்ரத்ரா, சமீர்தீகே (விக்கெட் கீப்பர்), தீப்தாஸ்குப்தா (விக்கெட் கீப்பர்), ராகுல்டிராவிட், சச்சின்டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமண், ஹேமங் பதானி, எஸ்.எஸ் .தாஸ், என்.ரமேஷ், முகமது கயிப், வீரேந்திர ஷேவாக், தினேஷ்மோங்கியா, யுவராஜ் சிங், ஸ்ரீநாத். ஜாகீர்கான், ஹர்விந்தர் சிங், டி. மொகந்தி, அஜீத் அகர்கர், ஏ.நெக்ரா, ராகேஷ் பட்டேல், ரித்தேந்தர்சோதி. ஹர்பஜன் சிங், சரண்தீப் சிங், ராகுல் சங்வி மற்றும் எஸ் பகுதுலே.
அறிவிக்கப்பட்டுள்ள 26 வீரர்கள் கொண்ட பட்டியிலிலிருந்து ஜிம்பாப்வே செல்லும் வீரர்களின் இறுதி பட்டியல் முடிவு செய்யப்படும்.
தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் பயிற்சி முகாம் அடுத்தமாதம் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை பெங்களூரில் நடக்கிறது.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் விக்கெட் கீப்பர் மோங்கியாவும், சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயும் இடம்பெறவில்லை.
கும்ப்ளேக்கு தோள்பட்டை வலி காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. இதன் காரணமாக அவர் சமீபத்தில் இந்தியாவில் நடந்தஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.