நியாயம் கேட்ட பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு அருகே குடிநீரில் சாயம் கலப்பதை கண்டித்து போராட்டம் நடத்திய பொது மக்கள் மீதுபோலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் தனியார் சாயத் தொழிற்சாலைஉள்ளது.
இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காரணமாக குடிநீர் மற்றும் பாசன நிலங்கள்பாதிக்கப்படுகின்றன. அதனால் இந்த ஆலையை மூடவேண்டும் என்று புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 200பெண்கள் உள்பட ஏராளமானோர் அந்தச் சாயத் தொழிற்சாலை முன் உள்ள சாலையில் திங்கள்கிழமைகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சென்னை - திருப்போரூருக்கு இடையே சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் வாசுதேவன்ஆகியோர் போக்குவரத்து தடைபடுவதால் அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறினார்.
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களோ கோரிக்கையை ஏற்க வேண்டும் அல்லது கலெக்டர்வந்தால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களைப் போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆத்திரம் அடைந்தஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசியும் உருட்டுக் கட்டைகளைக் கொண்டும் தாக்கினர்.
இத்தாக்குதலில் போலீசார் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. 13 போலீசார்காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளையும்வெடித்தனர்.
அதன்பிறகும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால், பிளாஸ்டிக் புல்லட்கள் பொருத்தப்பட்டதுப்பாக்கியால் போலீசார் சுட்டனர். இதில் அன்னம்மாள் (48) மற்றும் ராஜா (34)காயமடைந்தனர்.
இக் கலவரம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரைதாம்பரம்-திருப்போரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.