For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமரச பேச்சு நடத்த புலிகளுக்கு இலங்கை அரசு அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

சமரசப்பேச்சுக்கு வாருங்கள் என்று இலங்கை அரசு புலிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக சண்டை நடந்துவருகிறது.

இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி புலிகள் ஒருதரப்பு சண்டைநிறுத்தம் அறிவித்திருந்தனர்.

ஆனால் இதற்கு இலங்கை அரசு எவ்வித பதிலும் கூறவில்லை. தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தது. இதையடுத்து,புலிகள் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி தங்கள் சண்டைநிறுத்தத்தைக் கைவிட்டனர். பின்னர் ராணுவ வீரர்களை நோக்கிக்கடும் தாக்குதல் நடத்தினர்.

இலங்கையின் முப்படை வீரர்களும், புலிகள் நடத்திய கடும் தாக்குதலால் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடஆரம்பித்தனர்.

இந்தத் தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி புலிகளுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நேர்மையாகவும், துரிதமாகவும் சமரச பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று இலங்கை அரசு தனது அழைப்பில்புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இருப்பினும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முன் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படுமா என்பது குறித்து அதில் எதுவும்குறிப்பிடவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X