இன்று அக்னிநட்சத்திரம் ஆரம்பம்
கோவை:
கத்தரி வெயில் என அழைக்கப்படும் கொளுத்தும் வெயில் காலத்தின் உச்சகட்டமான அக்னிநட்சத்திரம்வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் சித்திரை மாத இறுதியில் 14 நாட்களிலும் வைகாசி மாத துவக்க 25 நாட்களிலும் வெப்பம்உச்சக்கட்டத்தில் இருக்கும்.
இந்த வெப்பக்காலத்தில் அனல் தகிக்கும் வெப்பம் வெளிப்படுவதால், இக்கால கட்டத்தை முன்னோர்கள் "அக்னிநட்சத்திரம் என பெயரிட்டுள்ளனர். இதனை கத்திரி வெயில் எனவும் கூறுவர்.
பழங்காலம் தொட்டே அக்னி நட்சத்திர காலங்களில் அனல் தகிக்கும் வெப்பம் தவறாமல் இடம் பெறுவதுமுன்னோர்களின் வான சாஸ்திரத்திற்கு எடுத்துக் காட்டு.
இந்த நாட்களில் மனிதர்களுக்கு மட்டுமல்ல, தெய்வங்களையும் குளிர்விக்கும் முறைகள் நடைமுறையில் இருந்துவந்துள்ளன.
கிராமப்புறங்களில் உள்ள அரசமரத்தடியிலோ, அல்லது வேறு மரங்களின் கீழோ உள்ள தெய்வங்களுக்கு மேலாகமண்பானை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி வைப்பர்.
பின்னர் தெய்வச் சிலைகளுக்கு நேர் கீழே மண்பானையில் துளையிட்டு, அந்த சிலைகளின் மீது சொட்டுச்சொட்டாக நீர்விழும்படி செய்வர். இத்தகைய நடைமுறை இன்றும் இருந்து வருகிறது.
இந்த காலகட்டத்தில், தமிழகத் தேர்தலும் வந்து சேர்ந்துள்ளது. அனல் பறக்கும் வெப்பத்துடன் வேட்பாளர்களின்ஓட்டு வேட்டையும் துவங்கியுள்ளது.
அதோடு தேர்தல் களத்தில் சினிமா நட்சத்திரங்களின் பிரச்சாரங்களும் சூடுபிடிக்கிறது. சினிமா நட்சத்திரங்களின்அனல் பறக்கும் பிரச்சாரம் என்றோ துவங்கி விட்டது. ஆனால் அக்னி நட்சத்திரம் வெள்ளிக்கிழமைதான்தொடங்குகிறது.