For Daily Alerts
Just In
ஹைதராபாத்-சென்னை ரயில் தடம்புரண்டது: பயணிகள் தப்பினர்
சென்னை:
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை காலை 8.25மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு அருகே தடம் புரண்டது.
இதில் 7 பெட்டிகள் சரிந்து விழுந்தன.
தடம்புரண்ட 7 பெட்டிகளில், 3 பெட்டிகள் மட்டும் தனியாகக் கழன்று கொண்டு விட்டன என்று தெற்கு ரயில்வேசெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அதிர்ஷ்டவசமாக தடம் புரண்ட ரயிலில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, May 9, 2001, 5:30 [IST]