For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை: 11 மணிக்கே 35 சதவீத வாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் விறுவிறுப்பான மற்றும் சுறுசுறுப்பான ஓட்டுப் பதிவு அமைதியான முறையில்நடந்து வருகின்றன.

காலை 7 மணிக்கே பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கத் தொடங்கினர். இதனால், 11 மணி அளவில் 30 முதல்35 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் எலெக்ட்ரானிக் ஓட்டுப் பெட்டிகள் மூலம் வாக்குகள் அளிக்கப்படுவதால்தேர்தல் அமைதியான முறையில் விறுவிறுப்பாக நிடந்து வருகிறது.

தேர்தல் கமிஷனின் விதிமுறைகளைப் பின்பற்றி, கட்சியினர் இருநூறு அடி தூரத்திற்கு முன்பாக ஓட்டு சிலிப்புகளை எழுதிக்கொடுத்து வருகின்றனர்.

சில இடங்களில் எலெக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் சரியாக செயல்படாததால் பிரச்னைகள் எழுந்தன. இந்தப் பிரச்சனைகள்உடனடியாகத் தீர்க்கப்பட்டன. இதுவரை வன்முறைச் சம்பவங்களோ, அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை. அமைதியானமுறையில் நடந்து வருகிறது தேர்தல்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X