அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியாத 10,000 பேர்
கோவை:
கோவையின் பல இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கூட வாக்களிக்க இயலாத நிலைக்கு 10,000பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லை எனக் கூறி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க முடியவில்லை.
இதனால் எரிச்சலடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
கோவையில் காலை முதலே பரபரப்பான ஓட்டுப் பதிவு துவங்கியது. 4 மணி நேரத்தில் ஓட்டுப்பதிவு 35 சதவீதத்தை நெருங்கியது.இந் நிலையில், கோவை கிழக்கு, கோவை மேற்கு , தொண்டமுத்தூர் ஆகிய தொகுதிகளில் பல வாக்களார்கள் தங்களுக்குவாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஒரு சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்று இடங்களில் எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் சரியாக இயங்காததால், அங்கு வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இந்தபூத்துகளில் 50 நிமிடங்கள் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.
அவிநாசி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு தேர்தல் பணியாற்ற வந்த ஊர்க் காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், அந்தப்பகுதியில் சென்ற ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றார். இதனால், அங்கு ஊர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து ஊர்காவல் படையைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
தொண்டாத்தூர் தொகுதியில் வாக்களார் பெயர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டது பற்றிய புகாரை வேட்பாளர்களே நேரடியாகமாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். சிறு சிறு பிரச்னைகள் எழுந்தபோதும் இது வரை வாக்குப் பதிவு சுமூகமாகவே நடந்துவந்துள்ளது.
வெயில் அதிகரிக்க அதிகரிக்க வாக்குச் சாவடிகளில் மக்கள் கூட்டமும் குறைந்து கொண்டு வந்தது. உச்சி வெயிலில் மக்கள்வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. எனவே, காத்திருந்த வரிசைகள் காலியானதோடு, ஒரு சிலரே வந்து செல்லும் நிலைஏற்பட்டுள்ளது.
பகல் ஒரு மணிக்கு மேல் வாக்குப்பதிவு மந்த நிலையை எட்டியுள்ளது. மாலையில் ஓரளவு வாக்குப் பதிவு நடைபெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.