For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: வாக்களித்தவர்களிடம் கருத்து கணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு40 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்களித்துவிட்டு வந்தவாக்காளர்களிடம் இந்திய தொலைகாட்சி தூர்தர்ஷன் நடத்திய கருத்துக் கணிப்பில்இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் விவரம்:

மொத்த வாக்களித்தவர்களில் 40 சதவிகிதம் பேர் தி.மு.க., பா.ஜ.க, இடம் பெற்றுள்ளகூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிக்கு 28 சதவிகிதம் பேர்வாக்களித்துள்ளனர்.

அ.தி.மு.க.- பா.ம.க கூட்டணிக்கு 25 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

மற்றவர்களுக்கு 7சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர் என தெரியவந்தூள்ளது.

வாக்காளர்கள் வாக்களித்த சதவிகிதம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனைதொகுதிகளில் கட்சிகள் வெற்றி பெறும் என்பது குறித்த விவரம்தெரிவிக்கப்படவில்லை,

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X