வாக்குப்பதிவு அமைதியாக நடக்கிறது: போலீஸ் டிஜிபி
சென்னை:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மிகவும் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடக்கிறது என்று டிஜிபிராஜகோபால் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள்மிகவும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டு வருகின்றனர்.
இதுவரை எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை. அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்காது என்று நம்புகிறோம்.பதட்டம் மிக்க தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீஸார்உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 153 கம்பெனி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.