வைகோவுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:
வைகோ தன் மீது கூறியுள்ள ஆதாரமில்லாத குற்றச்சாட்டு குறித்து அவர் மீதுசட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தி.மு.கவினர்தேர்தலின் போது வன்முறையை தூண்டிவிடுவதற்கும், வாக்காளர்களைவாக்களிக்கவிடாமல் தடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக குற்றம் கூறி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதலிளிக்கும் விதமாக தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதிஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வைகோ கூறியுள்ள குற்றச்சாட்டு ஆதாமில்லாதது. வேண்டுமென்றே வைகோ தி.மு.க.மீதும் என் மீதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வைகோவின்அறிக்கையை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைஎடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கருணாநிதி எச்சரித்துள்ளார்
யு.என்.ஐ.