For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணப்பன் கட்சி தொண்டர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சாயல்குடி:

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தொண்டர் ஒருவர் வெயிலின் கொடுமைக்கு பலியானார்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது, அன்று முதல் வெயிலின் கொடுமைஅதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் தமிழ் தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர் அக்னி நட்சத்திரவெயில் கொடுமைக்கு பலியாகியுள்ளார்.

வியாழக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தொண்டர் திண்ணான் (வயது70). இவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கு அருகே இருகக்கும ஆய்க்குடியைச் சேர்ந்தவர்.

திண்ணான் கடலாடி தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் எம்.எல்.ஏ. தங்கவேலுக்கு ஆதரவாக தேர்தல் பணியில்ஈடுபட்டிருந்தார்.

வியாழக்கிழமை அருகிலுள்ள கிராம மக்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வைக்கும்பணியில் ஈடுபட்டிருந்தார். ஆய்க்குடிக்கு அருகிலிருக்கும் புணவாசல் கிராமத்திலிருந்து வாக்காளர்களைஅழைப்பதற்கு அவர் வந்த போது வெயிலின் கொடுமை தாங்காமல் சாலையில் மயங்கி விழுந்தார்.

அவர் மயங்கி விழுந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் மருத்துமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து போனார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X