For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவனந்தபுரம் ரயிலில் துணிகர கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயிலில் காட்பாடி அருகே மர்ம கும்பல் ஆயுத முனையில்கொள்ளையடித்துச் சென்றது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் மெயில்புறப்பட்டுச் சென்றது. ரயில் காட்பாடி நிலையத்திற்கு 9 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது காட்பாடி ரயில்நிலையத்தில்15 பேர் கும்பல் ஏறியது.

ரயில் காட்பாடி நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றது. லத்தேரி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது திடீரென15 பேர் கும்பலில் ஒருவர் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர் 15 பேரும்தங்களிடமிருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களைக் காட்டி பயணிகளை மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகள்மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டனர்.

20 நிமிடம் இந்தக் கொள்ளை தொடர்ந்தது. பின்னர் அக்கும்பல் இருளில் ரயிலை விட்டு இறங்கித் தப்பியது.பின்னர் ரயில் ஜோலார்பேட்டை நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றது. அங்கு ரயில்வே போலீஸாரிடம்கொள்ளைச் சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டது. கொள்ளை நடந்த இடத்திற்கு உடனடியாக ரயில்வேபோலீஸார் விரைந்து சென்றனர்.

காட்பாடி ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள ரயில் நிலையங்கள்அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X