தமிழகத்தில் மின் வெட்டு ஏன்?
சென்னை:
தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன் என்பது குறித்து தமிழக மின்வாரியம் விளக்கம்அளித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த நாளில் இருந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளார்கள். நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் மின் தடை ஏற்படுவதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டிய 700 மெகாவாட்மின்சாரம், தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக வரவில்லை.
இதன் காரணமாக தமிழகம் முழுவதிற்கும் சீரான மின் விநியோகம் செய்ய முடியவில்லை. இதற்காக மின்வாரியம்தமிழக மக்களிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நெய்வேலி அனல்மின் நிலையத் தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிவரும் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகக் கூறப்படுகிறது.