For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி: லாரி-டிராக்டர் மோதலில் 6 பெண்கள் பலி
தருமபுரி:
கிருஷ்ணகிரி அருகே திங்கள்கிழமை லாரியும், டிராக்டரும் மோதியதில் ஒரு குழந்தை உள்பட 6 பெண்கள்பலியாயினர்.
குருபரபள்ளி அருகே சின்னக் கொத்தூரைச் சேர்ந்த 30 பேர் ஒரு டிராக்டரில் ஆவர்நத்தம் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இந்த டிராக்டரின் பின்னால், மணல் ஏற்றிய ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
வராகசந்திரம் அருகே, டிராக்டரின் பின்புறம் லாரி மோதியதில், டிராக்டர் கவிழ்ந்தது. இதில் 3 வயதுப் பெண்குழந்தை உள்பட 4 பெண்கள் அந்த இடத்திலேயே இறந்தனர்.
மேலும் 2 பெண்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் இறந்தனர். இவ்விபத்தில் 12பேர் காயமடைந்தனர்.
குருபரபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, May 22, 2001, 5:30 [IST]