For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவர் கலியுக கலெக்டர்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ஹோட்டலில் வேலை பார்த்த சிறுவனுக்கு சம்பளப் பணத்தை பெற்றுக் கொடுத்து ஊருக்கு பத்திரமாக அனுப்பிவைத்தார் மாவட்ட கலெக்டர்.

கோவையில் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்த சிறுவன் முனியசாமி (13). இந்தசிறுவன் ராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். பள்ளியில் படித்த வந்த இச்சிறுவன், விடுமுறையில்வேலை செய்து சம்பாதிக்க நினைத்தார்.

எனவே, கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். சில நாட்கள் சென்றதும், அந்தச்சிறுவன் ஊருக்குச் செல்ல நினைத்தார். ஹோட்டல் முதலாளியிடம் தனக்கு உரிய சம்பளத்தை வழங்குமாறுக்கேட்டார். ஆனால், முதலாளிக் கொடுக்க மறுத்தார்.

ஊருக்குச் செல்ல வழியில்லாத சிறுவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்ஒரு முறை திங்களன்று நடக்கும் மனு நீதி நாள் அவனுக்கு நினைவு வந்தது. ஒரு மனுவை எழுதிக் கொண்டுமாவட்டக் கலெக்டரைப் பார்க்கச் சென்றார். எல்லோரும் மனுக் கொடுக்கும்போது அவனும் மாவட்ட கலெக்டர்சந்தானத்திடம் மனுக் கொடுத்தார்.

மனுக் கொடுக்க வந்தவன் சிறுவன் என்பதால், ஆச்சரியத்துடன் அவனுடைய பிரச்னையைக் கவனித்தார்கலெக்டர். மனுவைப் படித்து பார்த்த கலெக்டர் உடனே அதிகாரிகளை அழைத்து ஓட்டல் முதலாளியை அழைத்துவர உத்தரவிட்டார்.

ஓட்டல் முதலாளியை அதிகாரிகள் ஜீப்பில் அழைத்துக் கொண்டு வந்தனர். அந்த ஓட்டல் உரிமையாளரிடம்சிறுவன் முனியசாமிக்கு சேர வேண்டிய சம்பளப் பணம் ரூ.500 ஐ பெற்றுக் கொடுத்தார். மேலும், சிறுவனைஜீப்பில் அழைத்துச் சென்று பத்திரமாக பஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார் கலெக்டர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X