உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி: கண்ணப்பன்
சென்னை:
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மக்கள் தமிழ் தேச கட்சியின் நிறுவனர்கண்ணப்பன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மே 10 சட்டசபை தேர்தலில் நாங்கள் 6 இடங்களில் போட்டியிட்டோம். இவற்றில் 5 இடங்களில் மிகக் குறைந்தஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டதைத்தான் இதுகாட்டுகிறது.
இத்தேர்தல் மூலம் எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அடுத்து உள்ளாட்சித் தேர்தலில்தான் எங்கள் முழுக்கவனமும் உள்ளது. இத்தேர்தலிலும் திமுகவுடனான எங்கள் கூட்டணி தொடரும்.
தோல்விக்காக கூட்டணிக் கட்சியினர் யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை.
வரும் 28ஆம் தேதி சென்னை மைலாப்பூரில் மக்கள் தமிழ் தேச கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறஉள்ளது. அப்போது சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார் கண்ணப்பன்.