For Quick Alerts
For Daily Alerts
Just In
முஷாரபுக்கு இந்தியா அழைப்பு: அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன்:
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான பேச்சு வார்த்தைக்காக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்பைஇந்தியாவுக்கு அழைத்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி பிலிப் ரீக்கர் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையே எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைகளைக்குறைப்பதற்கு இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
பேச்சு வார்த்தைகளில் தலையிடுவதை அமெரிக்கா விரும்பவில்லை. இருந்தாலும் நிலைமையை வெகுஉன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம் என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]