For Quick Alerts
For Daily Alerts
Just In
சபாநாயகரின் தமிழ்த் தாய் வணக்கம்
சென்னை:
சபாநாயகர் பதவியேற்றவுடன், கவிதையுடன் தனது பேச்சைத் தொடங்கினார் காளிமுத்து.
தாய்த் தமிழை வணங்கும் விதமாக எழுதப்பட்டுள்ள அந்தக் கவிதையை, முதல்வர் ஜெயலலிதாவை வணங்கும்கவிதையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இதோ அந்தக் கவிதை ...
தாயை வணங்குகிறேன் தமிழ்த்
தாயை வணங்குகிறேன்.
உணர்வு நாளமெல்லாம் எங்கள்
உதிரத் துளியெல்லாம்
உறைந்து கிடக்கின்ற தமிழே
உன்னை வணங்குகிறேன்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
சங்கே முழங்கு என்ற
சங்கத் தமிழை வணங்குகிறேன்.
அறியாப்புதல்வருக்கும் நல்ல
அரியாசனம் தந்து அழகு பார்க்கும்
அன்னைத் தமிழை வணங்குகிறேன்.
மூலையில் கிடந்தோர்க்கும் கவரி
தந்த எங்கள் தமிழ்த் தாயை
உயிர் மூச்சென வணங்குகிறேன்.
தாயை வணங்குகிறேன் தமிழ்த்
தாயை வணங்குகிறேன்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]