For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரிசி கையிருப்பு: வெள்ளை அறிக்கை கேட்கிறது திமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரிசி கையிருப்பு பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுகவற்புறுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

ரூ.1,000 கோடிக்கு களஞ்சியத்தில் தானியம் வைத்திருப்பதாகக் கருணாநிதி கூறியதைப் பொய் என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.

ஆனால், இன்று தமிழக அரசின் கிடங்குகளில் அரிசியாக இருப்பது 5,30,000 டன். மேலும், 19,30,000 டன்நெல்லாக இருக்கிறது.

நெல்லுக்குள் அரிசி இருக்கிற ரகசியம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்த நெல்லை அரிசியாக அரைத்தால்சுமார் 9 லட்சம் டன்னுக்கும் அதிகமாக அரிசி கிடைக்கும்.

ஆக மொத்த அரிசி கையிருப்பு 14 லட்சம் டன்னுக்கும் அதிகமாகவே இருக்கும். இதன் மொத்த கொள்முதல் விலைரூ.1,000 கோடியைத் தாண்டும்.

இதைத்தான் கருணாநிதி 2 நாட்களுக்கு முன்னர் சொன்னார். ஆனால் அது பொய்யான தகவல் என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக அரசின் சமீபகால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்று கூறியுள்ளார்முதல்வர். அத்துடன், அரிசி கையிருப்பு குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றுஅறிக்கையில் கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.

கருணாநிதி சொல்வது பொய்: ஜெ.

முன்னதாக, "அரிசி கையிருப்பு பற்றி கருணாநிதி சொல்வது உண்மையல்ல. 1996ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சியைவிட்டு இறங்கிய போது ரூ.874 கோடி ரொக்க இருப்பு வைத்துவிட்டுச் சென்றோம். எல்லாவற்றையும்ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்ட திமுக அரசு, ரூ.700 கோடி நிதிப் பற்றாக் குறை வைத்துவிட்டுச் சென்றுள்ளது.நிதிநிலை பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்காக வெள்ளை அறிக்கை ஒன்றை நாங்கள் தாக்கல் செய்வோம்" என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X