பாகிஸ்தானுக்கு இந்தியா முறைப்படி அழைப்பு
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனையில் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரபுக்கு இந்தியாமுறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலருக்குக் வாஜ்பாய் கொடுத்தனுப்பியுள்ள கடிதத்தில்கூறப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தானுடன் நீண்ட கால அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நல்லுறவுடன் கூடிய நட்பை இந்தியா விரும்புகிறது.இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எதிரி வறுமைதான்.
நாட்டு மக்களின் நன்மைக்காக நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமாகின்றது.
இரு நாடுகளுக்கும் நட்புறவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் 1999 ம் ஆண்டு லாகூர் பயணம்மேற்கொண்டேன். முறிந்து போன உறவை நாம் புதுப்பிப்போம்.காஷ்மீர் பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளைநாம் பேசித் தீர்ப்போம்.
நீங்களும் உங்கள் மனைவி பேகம் முஷாரபும் இந்தியாவுக்கு வர வேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளைநீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை இந்திய ஹை கமிஷனர் கதிர் வியாஸ் இஸ்லாமாபாத் சென்று அந்நாட்டின் வெளியுறவுத் துறைசெயலர் இனாமுல் ஹக்கை சந்தித்துக் கொடுத்தார்.