தாய்லாந்தில் விமானவிபத்து: 5 பேர் சாவு
பாங்காக்:
தாய்லாந்து நாட்டு கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடலுக்குள் நொறுங்கி விழுந்துவிபத்துக்குள்ளானதில் 5 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்று மூத்த கடற்படை அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
விமான விபத்து குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் நரோங் தேப்விஸ் கூறுகையில், தாய்லாந்தில் உள்ளதுவளைகுடா பகுதியான டிரேவ்லார். இங்கு மீனவர்களின் படகு கடலில் மூழ்கியதில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக கடற்படை அதிகாரிகள் சனிக்கிழமை பிற்பகல் மீட்புப்பணியில்ஈடுபட்டிருந்தனர்.
மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டரில் 7 உயர் அதிகாரிகள் பயணம் செய்தனர். இந்தக் ஹெலிகாப்டர்நாராதிவாத் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தது.
இதில் 7 அதிகாரிகளும் கடலுக்குள் மூழ்கினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிர்தப்பினர். உயிரிழந்த 5அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு விட்டன.
விமான விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
யு.என்.ஐ.