திடீர் வெள்ளத்தில் சிக்கி பெண் பலி
கோவை:
கல்லார் பழப்பண்ணை நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு பெண் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.மேலும் நீர் வீழ்ச்சியில் விழுந்த 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பழப்பண்ணை உள்ளது. இந்தப் பழப்பண்ணையில் உள்ள நீர் வீழ்ச்சிசுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. இங்குள்ள நீர் வீழ்ச்சியைக் கண்டு களிப்பதோடு அதில்குளிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காக மாலதி (37) மற்றும் அவரது மகன் சாய்ராம் (15) ஆகியோர் சென்றனர். அங்குஅவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென நீர் வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்குஏற்பட்டது.
இதில், மாலதி அடித்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது மகன்சாய்ராம், பாறையின் மேல் நின்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதே நேரத்தில் நீர் வீழ்ச்சியில் சிக்கிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிலால் (20), வில்லிவாக்கத்தைச் சேர்ந்தஎஸ். ராஜேஷ் (15), அனிருத்ராம் (9), மருதமலையைச் சேர்ந்த சுரேஷ்ராம் (35) ஆகியோரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களின் கதி என்ன எனத் தெரியவில்லை. காணமல் போன நான்குபேரையும் தேடும்பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.