ஜாமீன் கோருகிறார் பரிதி இளம்வழுதி
சென்னை:
தன்னை ஜாமீனில் விடக் கோரி, எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான பரிதி இளம்வழுதி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நடந்தபோது, எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி தரப்பினருக்கும்,அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களைத் தாக்கியதாக பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை ஏற்று நீதிமன்றம் அவரை ஜாமீனில்விடுவித்தது. ஆனால் அரசுத் தரப்பில் எதிர்த்து அப்பீல் செய்ததால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார் பரிதி. இதேபோல, ஜான்பாண்டியனும் ஜாமீன் கோரி மனுச் செய்துள்ளார். இரு மனுக்களும் நீதிபதி மலைசுப்ரமணியம் முன்புசெவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றன.