கோவையில் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை
கோவை:
கோவை வங்கி அதிகாரியின் வீட்டில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை ராம்நகரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருபவர் எம்.எம்.டி .உசேன். இவர் சுங்கத்தில் உள்ள பார்க்டவுனில் குடியிருந்து வருகிறார். கடந்த 27ம் தேதி இரவு இவர் வீட்டைப் பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன்வெளியூர் சென்று விட்டார். பின்னர் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பொருட்களைச்சோதனையிட்டார். அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த ரொக்கம் மற்றும் நகைகள் காணமல் போயிருந்தது.
இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறிதது போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று பொள்ளாச்சியில் ஒரு வியாபாரியின் வீட்டில் 22 பவுன் நகை உள்பட ரொக்கம் பட்டப்பகலில்கொள்ளை போனது. பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். வெங்காயவியாபாரி. இவர் பகலில் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார்.
அந்த சமயம் பார்த்து யாரோ சிலர் இவரது வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும்ரொக்கத்தை திருடிச் சென்றனர். திருட்டுப் போன நகையின் மதிப்பு ரூ 50 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.