For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் பத்திரிக்கைகளுக்கு மீண்டும் சுதந்திரம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் சண்டை குறித்தசெய்திகளை வெளியிடுவதற்கு விதித்திருந்த தணிக்கையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டுள்ளதை பலஅரசியல் வல்லுனர்களும், பத்திரிக்கையாளர்களும் வரவேற்றுள்ளனர்.

இலங்யிைல் பல ஆண்டுகளாக விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நடந்துவருகிறது.

1998ம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள உள் நாட்டு பத்திரிக்கைகளும், அயல்நாட்டு பத்தரிக்கைகளும்விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வந்த சண்டை குறித்த செய்திகளைஇலங்கை அரசு தணிக்கை விதித்திருந்தது.

இந்த தணிக்கை செவ்வாய்க்கிழமை முதல் விலக்கிக் கொள்வதாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஅறிவித்தார்.

இலங்கை அரசின் இந்த முடிவு பத்திரிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் ஸ்ரீநிவாசசெல்வம் கூறுகையில், நார்வே தூதுக்குழுவினர் அமைதிபேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சண்டை குறித்த செய்திகளை வெளியிடுவதற்குவிதித்திருந்த தணிக்கையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டுள்ளது. வரவேற்கத்தக்கது என்றார்.

அரசியல் வல்லுனர் ஜெஹான் பெரேரா கூறுகயிைல், தற்போது இலங்கை அரசு சண்டை குறித்த் செய்திகளைவெளியிடுவதற்கான தணிக்கையை விலக்கிக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. சண்டை நடக்கும் பகுதிகளுக்குபத்திரிக்கையாளர்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.

இலங்கை அரசின் இந்த முடிவு சண்டை குறித்த உண்மையான நிலைகளை மக்கள் அறிய உதவும் என்றுகருதப்படுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X