பாக்.தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு இல்லை
டெல்லி:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இந்தியா வருவதையொட்டி டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்கூடுதல் பாதுகாப்பு போடும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக செயல்பாடுகளையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்போலீஸார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
காஷ்மீர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தைநடத்துவதற்காக ஜூலை மாதம் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இந்தியா வருகிறார்.
இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆர்.எஸ்.கிருஷ்ணய்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,முஷாரப் எப்போது வருவார் என்று திட்டவட்டமாக அறிவித்தபின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாங்கள்பரிசீலனை செய்வோம்.
இதுவரை சமூகவிரோதிகளிடமிருந்து முஷாரப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல்கள் எதுவும் வரவில்லைஎன்றார்.
இருப்பினும் பிற போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாததொடக்கத்திலோ முஷாரப் இந்தியா வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முஷாரப் வருவதற்கு முன்போ அல்லது அவர் வரும்போதே டெல்லியில் அவரது வருகையைக் கண்டித்துபோராட்டங்கள், ஊர்வலங்கள் நடக்கலாம் என்று தெரிகிறது என்று கூறினர்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை டெல்லியில் சிவசேனை ஆதரவாளர்கள் முஷாரப்பின் கொடும்பாவியைஎரித்தனர். இருப்பினும் சிவசேனை கட்சி பிரமுகர்கள் போராட்டத்தைப் போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெல்லியிலுள்ள சாங்கியாபுரி பகுதியில் பாகிஸ்தான் தூதரகம் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு கடுமையாகஉள்ளது. இன்னும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் பகுதியில் தர்ணா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லியின் புறநகர்ப்பகுதிகளில்போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1987 ம் ஆண்டுக்குப்பிறகு பாகிஸ்தான் ஆட்சியாளர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.