For Daily Alerts
Just In
வீரப்பன்: தேவாரத்துக்கு உதவ ஐ.ஜி.விஜயகுமார் நியமனம்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் புதிய இன்ஸ்பெக்டர்ஜெனரலாக கே. விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள இவர், இனி அதிரடிப்படையின் தலைவர் தேவாரத்தின்கீழ் பணிபுரிவார்.
அவரை தமிழகத்திற்கு வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் விஜயகுமார்என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, June 2, 2001, 5:30 [IST]