தாமரைக்கனியை விடுவிக்க கிருஷ்ணசாமி கோரிக்கை
சென்னை:
கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகக் சென்னை எம்.எல்.ஏ.விடுதியில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள்எம்.எல்.ஏ. தாமரைக்கனியை விடுதலை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட தாமரைக்கனி திங்கள்கிழமை காலை வரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.இது அவரது அடிப்படை உரிமையைப் பறிப்பது போன்ற செயலாகும்.
தாமரைக்கனி விடுவிக்கப்படவில்லையெனில் அதிமுக அரசு பழிவாங்கும் வகையில் நடந்து கொள்கிறது என்றேகூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சுயேச்சை கவுன்சிலரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய காரணத்தால்போலீஸார் கடந்த சனிக்கிழமை அவரை சென்னை எம்.எல்.ஏ.விடுதியில் வைத்து கைது செய்துஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கொண்டு வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.