For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்ட்வேர்: இந்தியாவின் புதிய அத்தியாயம் இங்கிலாந்தில் ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சாப்ட்வேர் துறையில் தன்னுடைய புதிய அத்தியாயத்தை இங்கிலாந்தில் ஆரம்பிக்கவிருக்கிறது இந்தியா.

இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளின் சங்கம் நாஸ்காமும் இங்கிலாந்தின் சி.எஸ்.எஸ்.ஏ.-யும் இதற்கான ஒப்பந்தம்ஒன்றில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் பல இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கு இதன்மூலம் மறுவாழ்வு கிடைக்கும்என்பதில் ஐயமில்லை.

தவிர, இந்திய சாப்ட்வேர்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற நாடாக இங்கிலாந்து விளங்கும் என்றும்கூறப்படுகிறது. இதன்மூலம், பிற ஐரோப்பிய நாடுகளிலும் தன்னுடைய வியாபாரப் பரப்பை இந்தியா அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாஸ்காம் சேர்மன் பிரோஸ் வான்ட்ரேவாலா நம்பிக்கைதெரிவித்தார்.

விலையில் மட்டுமில்லாமல் தரத்திலும் இந்திய சாப்ட்வேர்கள் சிறந்து விளங்குகின்றன என்று சி.எஸ்.எஸ்.ஏ. சார்பில்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜான் ஹிக்கின்ஸ் பாராட்டினார்

சாப்ட்வேர் உற்பத்தி தவிர, இன்டர்நெட், ஈ-காமர்ஸ், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு, டெலிகாம், மனிதவளமேம்பாட்டுப் பயிற்சி, தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அதன் வளர்ச்சி ஆகியவற்றிலும் கூடுதல் கவனம்செலுத்தப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X