For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கமிஷனர் மீது பரிதி வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோர்ட்டுக்குத் தவறான தகவலைக் கொடுத்திருப்பதால் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மற்றும் வேப்பேரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை கோர்ட் அவமதிப்பு பிரிவின் கீழ் தண்டிக்கக் கோரி எழும்பூர் திமுகஎம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக பரிதி இளம்வழுதி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது எழும்பூர் தொகுதியில் நடந்த தேர்தல் மோதல் தொடர்பாக டேவிட்என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான் கைது செய்யப்பட்டேன்.

கைது செய்யப்பட்டதால் என்னால் எம்.எல்.ஏவாக பதவி ஏற்க முடியவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 24-ம்தேதி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் எனக்கு ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டேன்.

ஆனால், மே 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை என்ஷ்ைரன போலீஸ் காவலில் எடுத்திருப்பதாகவும், ஜாமீனைரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை நகர போலீஸார் எனக்குக் கொடுக்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்காலதடை வாங்கினர்.

உண்மையில் அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் நான் வேலூர் சிறையில்தான் இருந்தேன். எனவே பொய்யானதகவலை கோர்ட்டுக்கு அளித்து கோர்ட்டை அவமதித்து விட்ட சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் ஆகியோரை கோர்ட் அவமதிப்புபிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X