For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருவாயூர் கோவிலுக்கு ஜெ.யானைக்குட்டி பரிசு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சூர்:

முதல்வர் ஜெயலலிதா, குருவாயூர் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கவிருக்கும் 12 வயது யானை ரூ.5.4லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த யானை வரும் ஜூன் 10ம் தேதி அன்பளிப்பாக வழங்கப்படும்.

தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா கேரள மாநிலத்தில் பல்வேறு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களைமேற்கொண்டார். மலப்புர மாவட்டத்தில் உள்ள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கரிடம் ஜோதிடம் பார்த்தார்.அப்போது பணிக்கர், அடுத்த முதல்வர் நீங்கள் தான் கவலை வேண்டாம் எனக் கூறி அனுப்பி வைத்தார்.

மேலும், ஜெயலலிதா கண்ணூர் மாவட்டத்தில் அருகே உள்ள தாலிபரம்பா ராஜரஜேஸ்வரி கோயிலுக்குச் சென்றுசிறப்பு பூஜைகள் நடத்தினார். குருவாயூரப்பன் கோயிலிலும் விசேஷ வேண்டுதல்களை நடத்தினார். தற்போதுமுதல்வர் பதவிக்கு வந்தவுடன் நேர்த்திக் கடனாக யானை ஒன்றை அன்பளிப்பாக குருவாயூர் கோயிலுக்குஅளிக்கவுள்ளார்.

இதற்கான 12 வயதுடைய ஒரு யானை தேர்வு செய்யப்பட்டுள்ளது. "கிரங்காடே கண்ணன் என்றபெயரிடப்பட்டுள்ள இந்த யானைக் குட்டியின் விலை ரூ. 5. 4 லட்சம். இதனை தேர்வு செய்ய சென்னை மற்றும்கேரளாவில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. இதில், டாக்டர்கள், அதிகாரிகள் யானை பற்றிய நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த யானைக் குட்டி வரும் ஜூன் மாதம் 10ம் தேதி கோயிலுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும், குருவாயூர் கோயிலின் முறையான அனுமதிக்காக காத்திருக்கின்றனர் இந்த குழுவினர்.

இந்த யானை அன்பளிப்பாக வழங்கப்படுவதையொட்டி, முதல்வர் ஜெயலலிதா கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். கண்ணூ

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு எஸ்.எம் கிருஷ்ணா, ராஜராஜேஸ்வரி கோயிலுக்குச்சென்று வழிபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X