இந்த கொசுத் தொல்லை, தாங்க முடியலப்பா!
கொழும்பு:
இலங்கையில் கொசு வளர்வதற்குக் காரணமாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இலங்கையில் பருவமழை ஆரம்பித்துள்ளது. இதனால், பல்வேறு நோய்கள் பரவுவதற்குக் காரணமாக இருக்கும்கொசுக்களின் எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளது.
கொசுக்களால் பரவும் காய்ச்சல் காரணமாக, கடந்த சில வாரங்களில் பல பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதைத் தடுக்க பல்வேறு முறைகளை இலங்கை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. கொசுக்கள் வளர்வதைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.
மாத்தளை நகரில் உள்ள ஒரு பஸ் டிப்போவில் உபயோகப்படுத்த முடியாத பழைய டயர்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன. தற்போது பெய்யும் மழையினால் இந்த டயர்களுக்கிடையில் நிறையத் தண்ணீர் தேங்கி,கொசுக்களின் கூடாரங்களாக மாறிவிட்டன.
இதைக் கண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த டயர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அழித்து விடுமாறுஅந்த பஸ் டெப்போவின் மானேஜரிடம் கூறியுள்ளனர். அந்த மானேஜரோ இதை அவ்வளவாகப்பெரிதுபடுத்தவில்லை.
அதிகாரிகள் திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்தும், அவர் இதைக் கண்டு கொள்ளவே இல்லை.
கடைசியில் கொசு உற்பத்தி செய்து பொதுநலத்திற்குக் கேடு விளைவித்ததாகக் கூறி, அந்த மானேஜரைப்போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.