ஜெ. மீது மனித உரிமை கமிஷனில் புகார்: தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப் போவதாக, முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி ஆவேசத்துடன் கூறினார்.
கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தாமரைக்கனி, ஜாமீனில்விடுதலையான பின்னர் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
அ.தி.மு.க.வுக்காக உழைத்த என்னை அ.தி.மு.க.வினரே சிறையில் வைத்ததை எண்ணி வேதனையடைகிறேன்.ஜாமீனில் விடக்கூடிய ஒரு வழக்குக்காக, சென்னை வந்து என்னைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
என்னைக் கைது செய்த போலீஸார், இரவு முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்திருந்தனர். என்னுடையமனைவி, மகன்களைப் பார்ப்பதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் சட்டத்தையும், மனித உரிமையையும் மீறிவிட்டனர்.
முதல்வர், டி.ஜி.பி., காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை ஆகியோர் மீது மனித உரிமை கமிஷனில் புகார்செய்வேன். மேலும், நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்.
நான் தி.மு.க.வில் இணைவதையும் பொதுமக்களுக்குச் சேவை செய்வதையும் யாராலும் தடுக்க முடியாது என்றார்தாமரைக்கனி.