For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டு அதிரடிப்படைக்கு தேவாரம் தலைவர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:


சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கான கூட்டு அதிரடிப் படையின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. தேவாரம்நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இத்தகவலைத் தெரிவித்தார்.

வீரப்பனைப் பிடிப்பதற்காகப் பல புதிய திட்டங்களைத் தீட்டுவதற்காக சென்னையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வீரப்பனைப் பிடிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவர்உயிருடன் பிடிக்கப்படுவார் என்றும் ஜெயலலிதா நம்பிக்கையுடன் கூறினார்.

தமிழகத்தின் சார்பாக முதன்மைச் செயலாளர் சங்கர், உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா, சிறப்பு அதிரடிப்படைத்தலைவர் தேவாரம், டிஜிபி ராஜகோபாலன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஐஜி விஜயகுமார் ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கர்நாடக முதன்மைச் செயலாளர் தெரசா பட்டாச்சார்யா, உள்துறை செயலாளர் பிரகாஷ், டிஜிபி ஸ்ரீனிவாசன், சிறப்புஅதிரடிப்படைத் தலைவர் கெம்பையா ஆகியோர் அடங்கிய கர்நாடகக் குழுவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது.

வீரப்பனைப் பிடிப்பதற்கான முக்கியத் திட்டங்களைத் தீட்டுவதற்காக நடைபெற்ற இந்தக் கூட்டம் 30 நிமிடங்கள்வரை நீடித்தது. கூட்டு அதிரடிப்படையின் தலைவராக தேவாரம் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கர்நாடகஅதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், 2 மாநிலங்களிலுமே வீரப்பனைப் பிடிப்பதற்கானசிறப்பு அதிரடிப்படை தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இம்முறை எப்படியும் வீரப்பனைப் பிடித்தே தீருவோம் என்று பலத்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா. ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி.யான தேவாரமும் வீரப்பனை மடக்கி விடுவோம் என்றுமீசையை முறுக்கிவிட்டு களத்தில் குதிக்கவிருக்கிறார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X