For Daily Alerts
Just In
ஜெ.வுக்கு எதிராக சாட்சியளிக்கிறார் சந்திரலேகா
சென்னை:
ஸ்பிக் ஊழல் வழக்கில், புதன்கிழமை ஜெயலலிதாவுக்கு எதிராக ஜனதாக் கட்சித் தலைவர்களில் ஒருவரானசந்திரலேகா சாட்சியம் அளிக்கவுள்ளார்.
முதலாவது தனிக் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. ஜெயலலிதா உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு சாட்சிகளில் ஒருவரான சந்திரலேகாவை புதன்கிழமை சாட்சியம் கூற வருமாறுநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து சந்திரலேகா சாட்சியம் அளிக்கவுள்ளார். ஆனால் தனக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் மட்டுமேசாட்சியம் அளிக்க வருவேன் என்று சந்திரலேகா கூறியுள்ளார்.
முதல்வருக்கு எதிராக சாட்சியமளிப்பதால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் துணை நிலை ராணுவத்தினர்பாதுகாப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே கோர்ட்டுக்கு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, June 13, 2001, 5:30 [IST]