அரபிக்கடலில் சிங்கப்பூர் கப்பல் மூழ்கியது: 3 பேர் சாவு
மும்பை:
சிங்கப்பூருக்குச் சொந்தமான டேங்கர் கப்பல் ஒன்று அரபிக்கடலில் மூழ்கியதில் 3 பேர் இறந்தனர்.
இந்தக் கப்பலில் உள்ள காலி டேங்கர் ஒன்று வெடித்ததன் காரணமாக, கப்பலில் ஓட்டை விழுந்து கடலில்மூழ்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. மும்பையிலிருந்து தென்மேற்கே 380 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமைஇரவு 11.15 மணிக்கு இச்சம்பவம் நடந்தது.
இந்தியாவின் வணிகக் கப்பல்களான எம்வி கிளோவ்லியும் எம்வி ஆஜ்டெக்கும் உடனடியாகச் சம்பவம் நடந்தஇடத்திற்குச் சென்று மீட்புப்பணியைத் துவக்கின.
மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 42 பேரில் 37 பேர் மீட்கப்பட்டு விட்டனர். இன்னும் 2 பேர் கதிஎன்னவாயிற்று என்று தெரியவில்லை. கப்பலின் கேப்டனும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் இன்னும் இந்தியக் கப்பல்களில்தான் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய எல்லைக்குள் கப்பல்மூழ்கியதால், அவர்களை விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்புவதா, அல்லது கோவாவுக்குக் கொண்டுசெல்வதா என்று அதிகாரிகள் இன்னும் முடிவு செய்ததாகத் தெரியவில்லை.