2 திருமணம் செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது
கோவை:
இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சப் இன்ஸ்பெக்டரைப் போலீசார் கைது செய்து செய்தனர்.
கோவை அருகே உள்ள தடாகம் ரோடு நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி (35). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு, தான் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி சாந்தாமணி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
அவரிடம் நிறைய வரதட்சணை பெற்றுள்ளார். மேலும், இவர்கள் ஒரு வருடம் குடும்பம் நடத்தியுள்ளனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பிறகு, சாந்தமணிக்குத் தெரியாமல், மத்திபாளையம் என்ற ஊரில் ராணி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகுடும்பம் நடத்தியுள்ளார். இவரிடமும் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில், மத்திபாளையம் பகுதியில், ஒரு இடத்தில் நின்று வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தார்.அப்போது இவர் மீது சந்தேகம் கொண்ட ஒருவர், போத்தனூர் போலீசுக்குப் போன் செய்து தகவல்தெரிவித்துள்ளார். அவர்கள் பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் சந்திரன் உட்பட, போலீசார் அங்கு சென்று, போலி "சப்-இன்ஸ்பெக்டரை கவனித்து அழைத்துவந்தனர். மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.