For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வந்த ரயிலில் தீ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னைக்கு வந்து கொண்டிருந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்தது. இதில் பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.

மைசூரிலிருந்து சென்னைக்கு காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமைகாலை 4 மணியளவில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது அரக்கோணம் அருகே கடம்பத்தூர் என்றஇடத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்புப் பகுதியில் திடீரெனதீப்பிடித்துக் கொண்டது.

ரயிலில் தீப்பிடித்துக் கொண்டதை அறிந்த பயணிகள் அலறி அடித்து அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலைநிறுத்தினர். உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் தீயணைப்புப் படையினருக்குத்தகவல் கொடுத்து தீயணைப்பு வீரர்களை அழைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.சுமார் 20 நிமிட தாமமதத்திற்குப் பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்னைக்குச் சென்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X