திமுகவில் சேர்ந்தார் தாமரைக்கனி
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.தாமரைக்கனி வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ரா.தாமரைக்கனி கழகத் தலைவர்கலைஞர் கருணாநிதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தார்.
அப்போது கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி மற்றும்முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுகவில் இணைந்தது குறித்து தாமரைக்கனி நிருபர்களிடம் கூறுகையில், மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான்நான் திமுகவில் சேர்கிறேன். இது தலைவர் எம்.ஜி.ஆர்.இருந்த கட்சி.
நானும் திமுகவில் இருந்தவன்தான். அதனால்தான் மீண்டும் திமுகவில் சேர்ந்துள்ளேன். யாருக்கும் பயந்துதிமுகவில் இணையவில்லை. என் மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்என்றார் தாமரைக்கனி.