For Daily Alerts
Just In
வியாபாரியிடம் ரூ. 55,000 கொள்ளை
சென்னை:
சென்னையில் நள்ளிரவில் ஆட்டோவில் வந்த வியாபாரியிடம் ஆட்டோவின் பின்பக்க திரையைக் கிழித்து ரூ.55,000 திருடப்பட்டது.
சென்னை பாரிமுனையில் ஜவுளிக்கடை வைத்திருப்பவர் கோயல். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் வழக்கம்போலவியாபாரத்தை முடித்து விட்டு சனிக்கிழமை இரவு வசூலான பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தனதுசொந்த ஆட்டோவில் அவர் போய்க் கொண்டிருந்தார்.
பணம் இருந்த பையை ஆட்டோவின் பின் பக்கம் வைத்திருந்தார். ஆட்டோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவில்போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
எனவே ஆட்டோ மெதுவாக போனது. அதைப் பயன்படுத்திக் கொண்ட யாரோ சிலர், ஆட்டோவின் பின் பக்கதிரையைக் கிழித்து அதிலிருந்த பணப் பையை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து பூக்கடை போலீஸில் கோயல் புகார் கொடுத்தார்.
Story first published: Monday, June 18, 2001, 5:30 [IST]