For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏவிடம் ரூ.2 லட்சம் கேட்டு வீரப்பன் மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

பாரதிய ஜனதா எம்எல்ஏவிடம் 2 லட்ச ரூபாய் கேட்டு சந்தனக் கடத்தல் வீரப்பன் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் குருசாமி. இவருக்கு கன்னடத்தில்எழுதப்பட்டிருந்த கடிதத்தில் வீரப்பன் கூறியிருப்பதாவது:

நான்தான் வீரப்பன் எழுதுகிறேன். எனக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்தப் பணத்தை போவிதளபுராமலையில் உள்ள மாதேஸ்வரன் கோயிலில் கொண்டு வந்து வைக்க வேண்டும். வரும்போது போலீசாரின்உதவியை நாடினால், கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.வாட்டாள் நாகராஜ் முகவரியையும் கொடுக்கவும்.

என்னிடம் பணம் இல்லாததால், உங்களிடம் கேட்டுள்ளேன். சாக்குப் பையில் பணத்தைக் கொண்டுவந்து,கோவிலில் வைக்கவும்.

முதன் முதலாக உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். இனி உங்களுக்கத் தொந்தரவு கொடுக்கமாட்டேன் என வீரப்பன் கடிதத்தில் கூறியுள்ளார்.

கடிதத்தில் வீரப்பன் கையெழுத்துக்குப் பதிலாக, 4 விரல் ரேகைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால், அதுவீரப்பனிடம் இருந்துதான் வந்ததா என்று போலீஸார் குழம்புகின்றனர்.

கடிதம் வந்ததைத் தொடர்ந்து, எம்எல்ஏ குருசாமிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X