விலை போன தேர்வு முடிவுகள்: விசாரணைக்கு உத்தரவு
அமைச்சரும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஹக்கீம் கூறுகையில், மக்கள் கூட்டணியில் உள்ளமூத்த அமைச்சர்கள் பலர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைஅவமதித்து வருகிறார்கள்.
மேலும் அதிபர் சந்திரிகா எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டுகிறார். அதனால்நாங்கள் ஆளும் கட்சியான மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கத் தீர்மானித்துள்ளோம்என்றார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் ஆளும்கட்சிக்கு 116 எம்.பிக்கள் உள்ளனர்.இதில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் உள்பட பல கூட்டணிக் கட்சிகள் மக்கள்கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு 109 எம்.பிக்கள் உள்ளனர்.
இதற்கிடையே, ஹக்கம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேரப்போவதாகவும், ஆளும் கட்சிக்கு அளித்து வந்தஆதரவை வாபஸ் பெறுவது குறித்தும் அடுத்த சில நாட்களில் ஆலோசனை செய்யவுள்ளதாகவும்உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகோதரரால் சந்திரிகாவுக்குத் தலைவலி:
இதற்கிடையே, இலங்கை அரசில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கும், அவரதுசகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான அனுரா பண்டாரநாயகாவுக்கும் இடையே பிரச்சனைஏற்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சரத் சில்வா மேல் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, ஐக்கியதேசியக் கட்சியை அனுரா பண்டாரநாயகா தூண்டி விடுவதாக அவர் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், அதிபர் சந்திரிகாவுக்கும், அவரது சகோதரரும், சபாநாயகருமான அனுரா பண்டாரநாயகாவுக்கும்இடையே பூசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இருவரும் ஒருவரையொருவர் தாக்கி குற்றம்சாட்டிவருகின்றனர்.
முன்னதாக, நீதிபதி சரத் சில்வா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, ஜனதாவிமுக்தி பெரமூனா ஆகிய கட்சிகள் ஜூன் 6 ம் தேதி மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் சர்ச்சைக்குரிய தலைமை நீதிபதி சில்வா பல விஷயங்களில் அதிபர் சந்திரிகா அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அவர் மேல் 14 குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த அனுரா பண்டாரநாயகா கடந்த நவம்பர் மாதம் இலங்கைநாடாளுமன்ற சபாநாயகராகப் பதவியேற்றுக் கொண்டார். அதற்குமுன் பல வருடங்களாக எதிர்க்கட்சி வரிசையில்அமர்ந்திருந்தவர்.
முதலில் சந்திரிகாவுடன் இருந்த அனுரா பண்டாரநாயகா, கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து ஏற்பட்டகருத்துவேறுபாடுகளால், அவரிடமிருந்து பிரிந்தார். பின்னர் 1993 ம் ஆண்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியகட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.