வீரப்பன்: பாஜக எம்எல்ஏவுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு
சத்தியமங்கலம்:
வீரப்பன் விடுத்த மிரட்டல் காரணமாக பாஜக எம்.எல்.ஏ.வுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. குருசாமியிடம் 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு வீரப்பன் கடிதம்அனுப்பியிருந்தார். இந்த மிரட்டல், தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தால் பின் விளைவுகளைச் சந்திக்கநேரிடும் எனவும் கூறியிருந்தார் வீரப்பன்.
இதையடுத்து பாதுகாப்புக் கோரி, குருசாமி போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே, இவருக்குஅதிரடிப்படை போலீசார் அடங்கிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தில் ரோடு மறியல்: சத்தி-மைசூர் ரோட்டில் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் கெஜனூர் மாரன் (27) என அடையாளம் காணப்பட்டது. இவரது உடல் மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
நீண்ட நேரம் ஆகியும் பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை. எனவே, பொதுமக்கள் திடீரென சாலை மறியலில்ஈடுபட்டனர்.
இதனால் சத்தி-மைசூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு சாலை மறியல்கைவிடப்பட்டது.