For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக எம்.எல்.ஏ. கைது: போலீஸ் கமிஷ்னருக்கு நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கிற்குப் பதில் தருமாறு சென்னை மாநகரப்போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது, சென்னை எழும்பூர் தொகுதியில் ஜான்பாண்டியன் கோஷ்டிக்கும் பரிதி இளம்வழுதி கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜான் பாண்டியனின் ஏஜெண்டு ஒருவரைத் தாக்கியதாக பரிதி இளம்வழுதி மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்து, மே 17ம் தேதி அவரைக் கைது செய்தனர்.

ஆனாலும், கடந்த மே 22ம் தேதி பரிதியை ஜாமீனில் விடுதலை செய்யும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஜாமீன்விடுதலை தீர்ப்பை எதிர்த்து, போலீஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மே 28ம் தேதிவரை ஜாமீனுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பின்னர் கடந்த 31ம் தேதி பரிதி ஜாமீனில் விடுதலை ஆனார். அவர் வெளியே வந்ததும், தவறான தகவலைபோலீஸார் உயர் நீதிமன்றத்துக்குக் கொடுத்ததால், தேவையில்லாமல் பல நாட்கள் ஜெயிலில் இருக்கவேண்டியநிலை ஏற்பட்டுவிட்டது என்றும், இதனால் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜேந்திரகுமார் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்றும் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தார்.

வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் குழு, இதுகுறித்து இன்னும் 4 வாரங்களில் பதில் தருமாறு முத்துக்கருப்பன்,ராஜேந்திரகுமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X