விம்பிள்டனில் நுழையும் முதல் இளம் இந்திய வீராங்கனை
ஹைதராபாத்:
ஆந்திராவைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஜுனியர் விம்பிள்டன் போட்டியில்விளையாடும் வாய்ப்பை மெயின்டிரா மூலம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் மிக இளம் வயதிலேயே விம்பிள்டன் போட்டியில் மெயின்டிரா முலம் தகுதி பெற்று விளையாடும்முதல் இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சானியா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வயது 18. இவருக்கு கிராண்ட் ஸ்லாம் போட்டியானவிம்பள்டனில் மெயின் டிரா மூலம் விளையாட விம்பிள்டன் 2001 கமிட்டி அனுமதி அளித்துள்ளது.
உலக டென்னிஸ் ராங்கிங்கில் 18க்கு வயதுக்கு உள்பட்ட ஜுனியர் டென்னிஸ் போட்டியில் சானியா 57வதுஇடத்தில் இருக்கிறார். இவர் விம்பிள்டன் தகுதிச் சுற்றில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் மெயின்டிராவின் மூலம் நேரடியாக விம்பிள்டன் போட்டியில் விளையாடஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
சானியா தான் விம்பிள்டன் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தியை தனதுதந்தைக்கு லண்டனிலிருந்து தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
இது குறித்து சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், சானியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதுமகிழ்ச்சி அளிக்கிறது. சானியா நிச்சயம் வெற்றியடைவார். ஏனென்றால் இந்த வருடம் அவர் 6 சர்வதேச டென்னிஸ்ஜுனியர் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்றார். இதே கருத்தையே சானியாவின் பயிற்சியார் பர்வீன்பார்கவாவும் தெரிவித்தார்.
சானியாவிற்கான லண்டன் பயணச்செலவுகளை ஜி.வி.கே. குரூப் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. சானியா முதல்போட்டியை ஜுலை மாதம் 1ம் தேதி விளையாடுவார். தகுதிச் சுற்றுகள் இந்த மாதம் 28ம் தேதி துவங்குகிறது.
விம்பிள்டன் போட்டிகளுக்கு முன் குவீன்ஸ் கிளப்பில் நடைபெறும் போட்டிகளிலும் சானியா விளையாடுகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.