For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

47 சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோழிக்கோடு:

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கடலுண்டி ஆற்றில் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 47 பேரின் சடலங்கள்கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேசெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த ரயில் விபத்து குறித்து நீண்ட விசாரணை நடத்துமாறும் தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி:

வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோழிக்கோடு கடலுண்டி ஆற்றில் மங்களூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயிலின் 8பெட்டிகள் தடம்புரண்டு விழுந்தன. இதில் இறந்த மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்கும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

கடற்படை வீரர்களும் மீட்புப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் விபத்து நடந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்தி:

ரயில்வே பாதுகாப்புத்துறை பெங்களூர் பிரிவு ஆணையர் பிரணாப் குமார் சென் தலைமையில் விபத்து குறித்து முதற்கட்ட நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.

பிரணாப் சென் தலைமையில், ரயில்வேத்துறை மெக்கானிக்கல் பிரிவு, பொறியில் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை முடியும் வரை அப்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட 60 சடலங்களில் 34 பேரின் உடல்கள் அடையாளம்கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

காயமடைந்தோரில் 222 பேர் பல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 38 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகஉள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X