For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆகஸ்டு 15ல் முதல் சைகை மொழி அகராதி வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

இந்தியாவில் முதல் முறையாக உருவாகும் சைகை மொழி அகாரதி, ஆகஸ்டு 15ம் தேதி வெளியிடப்படுகிறது.

காது கேளாதோருக்கான சைகை மொழி அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது. கோவை ராமகிருஷ்ணா மிஷன்இந்த அகராதியை வெளியிடுகிறது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு இயக்குநர் மணி கூறியபோது:

உலகம் முழுவதிலும் காதுகேளாதோர் பயன்படுத்தும் சைகை மொழி, வேறுபாடுகள் நிறைந்தவையாக உள்ளது.இந்தியாவில் பயன்படுத்தப்படும் சைகை மொழியும் சற்று வித்தியாசமானது. எனவே, இந்த சைகை மொழியைப்புத்தக வடிவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இந்த அகராதியில் 1,600 சைகை மொழி வார்த்தைகள் இடம் பெறும். டி.வி.யில் வாசிக்கப்படும் சைகை மொழிசெய்தி பலரால் புரிந்து கொள்ள முடியாததற்கு ஒருங்கிணைப்பு இல்லாததும் காரணம்.

எனவே, சைகைகள் அனைத்தையும் திரட்டி புத்தக வடிவில் வெளியிடுகிறோம். முதலில் 3 ஆயிரம் பிரதிகள்அச்சடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி இந்த சைகை மொழி அகராதி வெளியிடப்படும் என்றார் மணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X